Sunday, January 14, 2007

Arani River

உலகின் தலைசிறந்த நாகரீகங்களில் ஆற்றங்கறை நாகரீகமும் ஒன்று. பொன்னேரி ஆற்றங்கறை நாகரீகத்தை அடிப்படையாகக்கொண்டது. பொன்னேரி சிவன் கோவிலுக்கு பின்புறம் ஆரணியாறு ஓடுகிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டையில் இருந்து ஆரம்பமாகிறது.
ஆந்ராவில் இருந்து பாயும் கிருஷ்ணா நதி ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழகத்தில் நுழைகிறது. ஊத்துக்கோட்டையில் இருந்து இந்த நதி கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என இரண்டாக பிரிந்து கடலில் சென்று சங்கமமாகிறது.
கொடுதலை ஆறு சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கிறது. சேமிக்கப்போக மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாளம், நாபாளத்து பாளம் வழியாக வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
ஆரணி ஆறு பெரியபாளயத்தில் குடிகொண்டுள்ள பவானி அம்மனின் சன்னிதானத்தின் வழியாக பாய்ந்தோடி பொன்னேரி சிவன் கோவிலின் வழியாக பெரும்பேடு முருகன் கோவிலை கடந்து சென்று வங்காள விரிகுடாவில் சங்கமமாகிறது. பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு எனும் இடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்காக அணை கட்டி தண்ணீரை சேமித்து சுற்றிலுமுள்ள விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுமாறு செய்துள்ளனர்.
பொன்னேரி ஆற்றங்கரை ஓரமாக கும்மனஞ்சேரிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் தொழு நோயாளிகளுக்கு அரசாங்கம் குடில் தந்து அவர்களை பராமரிக்கிறது. பெரும்பேடு முருகர் சிலை இந்த ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்ததாகவும், கிடைத்த சிலையை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் கட்டி வழிபடுவதாகவும் என் பாட்டி கூறுவாள்.

என் பாட்டியின் பால்யகாலத்தில் சித்திரை மாதத்தில் கூட முழங்கால் அளவிற்கு பொன்னேரி ஆற்றில் தண்ணீர் ஓடிப் பாயுமென கூறுவாள். ஆனால் இன்று மழைகாலத்தில் கூட சில நாட்களுக்கு மட்டுமே இந்த ஆற்றில் தண்ணீரை பார்க்கமுடிகிறது.
ஒரு நாட்டின் உண்மையான மதிப்பே(belongings) அந்நாட்டின் இயற்கை வளங்களான காடு, மலை மற்றும் வற்றாத ஜீவ நதிகள் மட்டுமே. பல காலமாக தான் ஓடிப்பாயும் இடத்தை சுற்றியுள்ள பல கிராமவாசிகளுக்கு பயனளித்த இந்த ஆறு பொய்த்துப்போக காரணம் மக்களின் அறியாமையும், அரசாங்கத்தின் கவனக்குறைவும் மட்டுமே.
மீண்டும் சந்திப்போம்,
கிருஷ்ண பிரபு.

No comments: